Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன்.. விஜய் பட வாய்ப்பை இழந்தேன்'.. பிரபல இயக்குனர் வேதனை!
குடிப்பழக்கத்தின் காரணமாக விஜய் பட வாய்பை இழந்திருக்கிறார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.
Recommended Video
சென்னை: குடிப்பழக்கத்தால் விஜய் பட வாய்ப்பை இழந்ததாக பிரபல இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
முரளி, சுவலட்சுமி இயக்கத்தில் கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படம் தினந்தோறும். இந்த படத்தை இயக்கியவர் நாகராஜ். இவரை தினந்தோறும் நாகராஜ் என்று தான் எல்லோரும் அழைப்பர்.
அபார திறமைகளை கொண்ட நாகராஜ் தினந்தோறும் திரைப்படத்தின் வெற்றியினால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். எந்நேரமும் குடித்துக்கொண்டே இருந்ததால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை.
கவுதம் மேனனின் வசனகர்த்தா
மின்னலே, காக்க காக்க உள்பட கவுதம் மேனனின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் நாகராஜ் தான். பல முன்னணி இயக்குனர்களின் படங்களில், கதை விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு சீன் சொல்வதையே தனது பணியாக மாற்றிக்கொண்ட நாகராஜ், குடிப்பதையே முழுநேர வேலையாக செய்துவந்தார். இதனால் அவரை நம்பி பட வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை.
விஜய் படம்
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நாகராஜ், குடிப்பழக்கத்தால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியிடம் 3 மணி நேரம் கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது. மறுநாள் ஒப்பந்தம் போடுவதாக இருந்தது.
வாய்ப்பை இழந்தேன்
ஆனால் நான் அன்று வழக்கம் போல் குடித்துவிட்டு அவரது அலுவலகம் சென்றேன். அது எஸ்.ஏ.சிக்கு பிடிக்கவில்லை. எந்நேரமும் குடிக்கும் என்னை நம்பி படம் தர அவர் விரும்பவில்லை. அதனால் விஜய் பட வாய்ப்பை இழந்தேன்", என தெரிவித்துள்ளார்.
முழுமையாக மீண்டுவிட்டார்
தினந்தோறும் நாகராஜ் தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து முழமையாக மீண்டுவிட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் மதுவை கையில் கூட தொடுவதில்லை. இதனால் அவரை நம்பி படங்களை தர தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கின்றனர். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் நாகராஜ்.