Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பஞ்சராக்ஷரம்'ன்னா இதுதான் அர்த்தமாம்? விளக்குகிறார் இயக்குனர்
சென்னை: பஞ்சராஷரம் என்றால் சிவன் என்று அந்தப் படத்தின் இயக்குனர் பாலாஜி வைரமுத்து தெரிவித்தார்.
சாகசம் நிறைந்த திரில்லர் கதையை கொண்ட படமாக உருவாகியுள்ளது, பஞ்சராக்ஷரம். சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி, சனா அல்டாப், கோகுல் உட்பட பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். பாலாஜி வைரமுத்து இயக்கியுள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில், இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசும்போது, பஞ்சராக்ஷரம் என்றால் சிவன். இந்தப்படத்தில் சிவனை உணரலாம். பொதுவாக எல்லோரும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைப்போம். நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் செல்லும்போது விபத்து நடக்கக்கூடாது என்று நினைப்பதற்கும், நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமென்று நினைப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.
ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சரியாகக் கணித்து சொல்பவர்கள் குறைவு. நாம் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கும். இந்தப்படம், சிறு சிறு நேர்மறையான எண்ணங்கள் மாறும் போது என்ன நடக்கும் என்பதைக் கூறும் என்றார்.
நாயகன் சந்தோஷ் பேசும்போது, இதில் கதைதான் ஹீரோ. தனி நாயகன் படமாக இல்லாமல் 5 முக்கியமான பாத்திரங்களிடையே கதை பயணிக்கும் என்றார்.
கலை இயக்குநர் சசி, பேசும்போது, இசையமைப்பாளர் சுமோ, படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின், சண்டை பயிற்சியாளர் பில்லா ஜெகன் உட்பட பலர் பேசினர்.