Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்
ராஜா சுப்பையா என்பவர் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத் தலைப்பால் அவர் பிரச்சனையில் சிக்கியுள்ளார். நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். அதனால் இந்த தலைப்புக்கு சூர்யா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ராஜா சுப்பையா சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான் சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பில் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் தலையீடு இருப்பதால் பதிவு செய்ய மறுத்தனர். சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர் என்னை தினமும் தொலைபேசியில் மிரட்டி வருகிறார். எனவே தயாரிப்பாளர் சங்கம் மீதும், ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜசேகர் கூறுகையில்,
நான் யாரையும் மிரட்டவில்லை. அவர் விளம்பரத்திற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். படத் தலைப்பு சூர்யாவை குறிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளோம் என்றார்.