Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா?
Recommended Video
சென்னை : நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் ஆகிய அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் பயணம் செய்துவரும் உதயநிதி ஸ்டாலின், வலுவான பின்னணி இருப்பதால் சமீபகாலமாக அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனையடுத்து திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மூன்றாம் கலைஞர்' என்ற பட்டத்தை அளித்துள்ளனர். மூன்றாம் கலைஞரே என அவரது படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார். இவர்தான் ஏற்கெனவே விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத்தோன்றியது. pic.twitter.com/q04XeB0nAg
— Seenu Ramasamy (@seenuramasamy) March 28, 2018
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து முடித்ததும் உதயநிதியை 'மக்கள் அன்பன்' என்றே அழைக்கத் தோன்றுவதாகக் கூறியுள்ளார் சீனு ராமசாமி. படத்தின் டைட்டில் கார்டில் 'மக்கள் அன்பன்' உதயநிதி என்றே போடப்படும் என தெரிகிறது.
'மூன்றாம் கலைஞர்' பட்டத்திற்கே உதயநிதியை நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி கலாய்த்து வரும் நிலையில் இந்த 'மக்கள் அன்பன்' அவர்களுடைய கையில் சிக்கி என்ன பாடுபடப்போகிறதோ என்பதை நினைத்தால்தான் பதறுகிறது.