Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சூர்யா – ஜோதிகாவுக்காக கதை எழுதும் ஹலீதா ஷமீம்!
சென்னை: பெண் இயக்குனர்கள் மத்தியில் சமீபத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் ஹலீதா ஷமீம்.
சில்லு கருப்பட்டி படத்தினை இயக்கியது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார் ஹலீதா.
காதலராய் இருந்தபோது தனது மெழுகு சிலையை பார்த்து பிரமித்த கவுதம் கிட்ச்லு.. உண்மையை உடைத்த காஜல்!
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
2D ப்ரோடுக்ஷன்
ஹலீதா ஷமீமின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான anthology படமான சில்லுக் கருப்பட்டி ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது. இந்த படத்தை சூரியா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரித்தார்.
விகடனுக்கு பேட்டி
ஹலீதா, ஏலே திரைப்படத்தை தான் முதலில் இயக்கவிருந்ததாகவும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கி முடித்ததாகவும் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
முதல் தயாரிப்பு
ஹலீதா ஷமீம் பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி புரியும் போது தயாரான கதை தான் ஏலே. எனவே அவர்களே 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏலே படத்தை தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
கதை கேட்ட சூர்யா
சில்லு கருப்பட்டி படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தின் போது சூர்யா - ஜோதிகா இருவரையும் நேரில் சந்தித்ததாகவும், அப்போது நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க'ன்னு சூர்யா கூறியதாகவும் அதற்காக கதை ரெடி பண்ணி வருவதாகவும் ஹலீதா விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.