Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யா – ஜோதிகாவுக்காக கதை எழுதும் ஹலீதா ஷமீம்!
சென்னை: பெண் இயக்குனர்கள் மத்தியில் சமீபத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் ஹலீதா ஷமீம்.
சில்லு கருப்பட்டி படத்தினை இயக்கியது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார் ஹலீதா.
காதலராய் இருந்தபோது தனது மெழுகு சிலையை பார்த்து பிரமித்த கவுதம் கிட்ச்லு.. உண்மையை உடைத்த காஜல்!
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
2D ப்ரோடுக்ஷன்
ஹலீதா ஷமீமின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான anthology படமான சில்லுக் கருப்பட்டி ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது. இந்த படத்தை சூரியா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரித்தார்.
விகடனுக்கு பேட்டி
ஹலீதா, ஏலே திரைப்படத்தை தான் முதலில் இயக்கவிருந்ததாகவும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கி முடித்ததாகவும் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
முதல் தயாரிப்பு
ஹலீதா ஷமீம் பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி புரியும் போது தயாரான கதை தான் ஏலே. எனவே அவர்களே 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏலே படத்தை தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
கதை கேட்ட சூர்யா
சில்லு கருப்பட்டி படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தின் போது சூர்யா - ஜோதிகா இருவரையும் நேரில் சந்தித்ததாகவும், அப்போது நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க'ன்னு சூர்யா கூறியதாகவும் அதற்காக கதை ரெடி பண்ணி வருவதாகவும் ஹலீதா விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.