Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யா – ஜோதிகாவுக்காக கதை எழுதும் ஹலீதா ஷமீம்!
சென்னை: பெண் இயக்குனர்கள் மத்தியில் சமீபத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் ஹலீதா ஷமீம்.
சில்லு கருப்பட்டி படத்தினை இயக்கியது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார் ஹலீதா.
காதலராய் இருந்தபோது தனது மெழுகு சிலையை பார்த்து பிரமித்த கவுதம் கிட்ச்லு.. உண்மையை உடைத்த காஜல்!
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
2D ப்ரோடுக்ஷன்
ஹலீதா ஷமீமின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான anthology படமான சில்லுக் கருப்பட்டி ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது. இந்த படத்தை சூரியா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரித்தார்.
விகடனுக்கு பேட்டி
ஹலீதா, ஏலே திரைப்படத்தை தான் முதலில் இயக்கவிருந்ததாகவும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கி முடித்ததாகவும் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
முதல் தயாரிப்பு
ஹலீதா ஷமீம் பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி புரியும் போது தயாரான கதை தான் ஏலே. எனவே அவர்களே 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏலே படத்தை தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
கதை கேட்ட சூர்யா
சில்லு கருப்பட்டி படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தின் போது சூர்யா - ஜோதிகா இருவரையும் நேரில் சந்தித்ததாகவும், அப்போது நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க'ன்னு சூர்யா கூறியதாகவும் அதற்காக கதை ரெடி பண்ணி வருவதாகவும் ஹலீதா விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.