Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!!
இயக்குநர் களஞ்சியம் உயிருக்குப் போராடுவதாக அவரது நண்பர்கள் அறிக்கை, அஞ்சலியிடமிருந்து எப்படியாவது பணம் பறிக்க போட்ட நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆந்திராவில் ஓங்கோல் அருகே விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறார் களஞ்சியம் என்று முதலில் செய்தி வெளியிட்டார்கள். அடுத்து ஓங்கோல் மருத்துவமனையிலிருந்து திடீரென அவர் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறி, சுய நினைவே இல்லாமல் கிடக்கும் களஞ்சியத்தை அஞ்சலிதான் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று கோர்த்துவிட்டார்கள், அவரது நண்பர்கள்.
களஞ்சியம் விபத்துக்குள்ளானால், அஞ்சலி என்ன செய்ய முடியும் என்ற கேள்வியுடன்தான் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள் நேற்று. இன்றோ, களஞ்சியம் அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன் அம்பலமாக்கிவிட்டார்கள்.
அவர் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதில் கை மற்றும் தோளில் சிறு சிராய்ப்புகளுடன் காணப்படும் களஞ்சியம் , நல்ல நிலையில் காட்சி தருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், "களஞ்சியம் நன்றாகத்தான் இருக்கிறார். லேசான சிராய்ப்புகள்தான். அவரை பொது வார்டில்தான் வைத்திருக்கிறோம். அவரது உதவியாளர்கள் நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தனர்," என்றனர்.
இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, "கடந்த வாரம் வரை என்னை எப்படியெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார் களஞ்சியம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதாவது அவரது உண்மை முகம் என்னவென்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவர் பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் இழந்த பணமும் சொத்தும்தான் ஏராளம். நியாயமாக நான்தான் அவர்மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். இப்போது நான் என்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். தேவையின்றி என் பெயரை யாரும் எதிலும் இழுக்க வேண்டாம்," என்றார்.