Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்!
கொச்சி: வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது இளம் ஹீரோயின் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் கமல். ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
முன்னணி ஹீரோக்களான, மம்மூட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், பிருத்விராஜ் உட்ட பலரை இயக்கியுள்ளார்.
OTT விவகாரம்..எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய உரிமை இருக்கு.. தயாரிப்பாளர்கள் திடீர் அறிக்கை!
ஷாலினி
இந்தியில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படத்தையும் இயக்கியுள்ளார். தமிழில், பிரஷாந்த், ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கியவர் இவர்தான். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆமி என்ற மலையாள படத்தை இயக்கினார். இதில் மஞ்சுவாரியர், முரளி கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து பிரனய மீனுகளுடே கடல் என்ற படத்தை இயக்கினார்.
பாலியல் துஷ்பிரயோகம்
இதில் வினாயகன், திலிஸ் போத்தன் நடித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குனர் கமல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் நடிகை ஒருவர், பரபரப்பு புகார் கூறியுள்ளார். கேரள சினிமாவில் இது பரபரப்பானது. அந்த இளம் நடிகை கூறியுள்ள புகாரில், ஆமி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது, எனக்கு அடுத்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக, இயக்குனர் கமல் சொன்னார்.
ஏமாற்றிவிட்டார்
பிறகு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். அவர், ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்' என்று காட்டமாக புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸும் அவருக்கு அனுப்பியுள்ளார்.
பெயரை கெடுக்க
இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் கமல், 'இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. என் பெயரை கெடுப்பதற்கான பிரசாரம் இது. கேரள மாநில கலாசேத்ரா அகாடமியின் சேர்மனாகவும் நான் இருக்கிறேன். அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், இதன் பின்னால் இருக்கிறார் என சந்தேகிக்கிறேன்.
காத்திருங்கள்
எனக்கு வக்கீல் நோட்டீஸ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வந்தது. 'இது பொய்யான புகார் என்பதால், அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பார்ப்போம், காத்திருங்கள்' என்றார் எனது வழக்கறிஞர். காத்திருந்தேன். அதற்கு பிறகு எதுவும் இல்லை என்பதால், அதை நான் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான். இப்போது எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.