Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம்
சென்னை: திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி கண்ணதாசன் நகரில் எண்ணம் அறக்கட்டளையும், எழுத்தேணி அறக்கட்டளையும் தமிழ் எழுச்சிப் பேரவையுடன் இணைந்து முப்பெரும் விழா நடத்தின.
இந்த விழாவில் திரைப்பட இயக்குநரும், பாடல் ஆசிரியரும், நடிகருமான யார் கண்ணன் அவர்களுக்கு தமிழ் கலைக் காவலர் என்ற பட்டமும், தமிழகத் துறைமுகங்கள் பற்றியும் தமிழரின் கடலியல் பற்றியும் ஆய்வு நடத்தி வரும் ஒரிசா பாலசுப்பிரமணியன், தமிழக வரலாற்றுச் செய்திகளை தம் நாட்காட்டியில் வெளியிட்டுள்ள பூர்விகா நிறுவனத்தின் வடிவமைப்பாளர் துரை குமார், தமிழக நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வரும் கோவை வட வள்ளி சண்முகம், தமிழக நெல்விதைகளைப் பாதுகாத்து வரும் திருத்துறைப்பூண்டி செயராமன் ஆகியோர் தமிழ் மரபுக் காவலர் பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.
கவிஞர் பன்னீர் செல்வன், கவிஞர் மறத்தமிழ்வேந்தன், திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செல்லன், கல்லூரி கல்வித்துறைத் துணை இயக்குநர் அ.மதிவாணன், முனைவர் இறையரசன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.