Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சொல்ல வேண்டியதை ரசிக்கும் படியா சொல்றோம்... பற இயக்குனர் பாய்ச்சல்
சென்னை: பற, ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட படம் என்று இயக்குனர் கீரா சொன்னார்.
கீரா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம், 'பற'. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, அஷ்மிதா, சாந்தினி, சாஜூமோன், முத்துராமன் உட்பட பலர் நடித்துள்ளனர். விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர். சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லெமுரியா மூவிஸ், வி5 மீடியா, மற்றும் வர்ணலயா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு செய்கிறார் எஸ்.பி. முகில்.
இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. சினேகன் எழுதிய, உன்பேரை எழுதி வச்சேன் என்ற பாடல் ஹிட்டடித்துள்ளது.
மூன்று தலைமுறை பாடிய 'ஷியாமா ராகம்' ஆடியோ ரிலீஸ்
படம் பற்றி கீரா கூறும்போது, ஆணவக்கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தப் படம் வெளிவருவது தேவையான ஒன்றாக இருக்கும். ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இது இருக்கும். இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள்.
அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன.
இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் பற என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது பறத்தல். அது விடுதலையின் குறியீடு.
ஓரே இரவில் நடக்கும் கதை படம். இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும் விதமாகவே செய்திருக்கிறோம் என்றார்.
படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். வடசென்னை பிளாட்பார வாசியாக நித்திஷ் வீரா, பார் டான்சராக அஷ்மிதா, கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூமோன் நடித்துள்ளனர். திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். இம்மாத இறுதியில் படம் வெளியாகிறது.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே