Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சொல்ல வேண்டியதை ரசிக்கும் படியா சொல்றோம்... பற இயக்குனர் பாய்ச்சல்
சென்னை: பற, ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட படம் என்று இயக்குனர் கீரா சொன்னார்.
கீரா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம், 'பற'. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, அஷ்மிதா, சாந்தினி, சாஜூமோன், முத்துராமன் உட்பட பலர் நடித்துள்ளனர். விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர். சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லெமுரியா மூவிஸ், வி5 மீடியா, மற்றும் வர்ணலயா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு செய்கிறார் எஸ்.பி. முகில்.
இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. சினேகன் எழுதிய, உன்பேரை எழுதி வச்சேன் என்ற பாடல் ஹிட்டடித்துள்ளது.
மூன்று தலைமுறை பாடிய 'ஷியாமா ராகம்' ஆடியோ ரிலீஸ்
படம் பற்றி கீரா கூறும்போது, ஆணவக்கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தப் படம் வெளிவருவது தேவையான ஒன்றாக இருக்கும். ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இது இருக்கும். இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள்.
அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன.
இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் பற என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது பறத்தல். அது விடுதலையின் குறியீடு.
ஓரே இரவில் நடக்கும் கதை படம். இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும் விதமாகவே செய்திருக்கிறோம் என்றார்.
படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். வடசென்னை பிளாட்பார வாசியாக நித்திஷ் வீரா, பார் டான்சராக அஷ்மிதா, கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூமோன் நடித்துள்ளனர். திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். இம்மாத இறுதியில் படம் வெளியாகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?