twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி வழக்கு.. நீதிமன்றத்தில்அபராத தொகையை கட்டினார் லிங்குசாமி!

    |

    சென்னை : செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டினார்.

    Recommended Video

    Lingusamy | Cheque மோசடி வழக்கு, 6 மாத சிறை தண்டனை.. நீதிமன்றம் உத்தரவு! *Kollywood

    லிங்குசாமி இயக்குநராக மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் உள்ளார். 2015-ல் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி, விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

    லண்டனில் நைட் பார்ட்டி.. புதிய காதலருடன் லூட்டி அடிக்கும் எமி ஜாக்சன்.. தீயாய் பரவும் போட்டோ! லண்டனில் நைட் பார்ட்டி.. புதிய காதலருடன் லூட்டி அடிக்கும் எமி ஜாக்சன்.. தீயாய் பரவும் போட்டோ!

    தி வாரியர்

    தி வாரியர்

    இதனை தொடர்ந்து மீண்டும் வெற்றி இயக்குநராக வரவேண்டும் என அடுத்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

    செக் மோசடி

    செக் மோசடி

    பிரபல இயக்குநர் லிங்குசாமி செக் மோசடி செய்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இயக்குநர் லிங்குசாமி கார்த்தி, சமந்தாவை வைத்து எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்திற்காக பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.103 கோடி கடனாக பெற்றிருந்தார். கடனை திருப்பி கேட்ட போது அதற்காக செக் கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனால், அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி இருக்கிறது.

    6 மாதம் சிறை

    6 மாதம் சிறை

    இதனால், லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் செக் மோடி வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அபராதத்தை கட்டினார்

    அபராதத்தை கட்டினார்

    இந்நிலையில், லிங்குசாமி அபராதத் தொகை ரூ 10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் இன்று கட்டினார். மேலும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் லிங்குசாமி நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

    English summary
    Director Lingusamy paid fine in court in check bounce case : செக் மோசடி வழக்கு, இயக்குநர் நீதிமன்றத்தில் அபராதத்தை கட்டினார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X