Don't Miss!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிறுகதையை மீண்டும் படமாக்கும் இயக்குனர்.. மணப்பாடு பின்னணியில் நெஞ்சை உலுக்கும் யதார்த்த கதை..!
சென்னை: இரண்டு சிறுகதைகளை இணைத்து சினிமாவாக்க இருப்பதாகச் சொன்னார் பிரபல இயக்குனர்.
நடிகை அர்ச்சனா, பிரகாஷ்ராஜ், ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்த படம் அழியாத கோலங்கள் 2.
எம்.ஆர்.பாரதி இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் லாபம் சம்பாதித்தது.
என்னோட க்யூட்டி.24 வயசு வித்தியாசம் இருந்தாலும் என்னா அன்யோன்யம்..பிகினியில் ஆட்டம்போடும் பிரபல ஜோடி
சிறுகதை
இது, மேற்கு வங்க எழுத்தாளர் சௌமிக் மித்ராவின் சிறுகதையை அடிப்படையாக வைத்து, உருவான படம். பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் நினைவாக, இந்தப்படத்துக்கு 'அழியாத கோலங்கள் 2' என பெயர் வைத்ததாக எம்.ஆர்.பாரதி அப்போது தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில், எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், அவர் மனைவியாக ரேவதி, காதலியாக அர்ச்சனா நடித்துள்ளனர்.
அடுத்தப் படம்
ஈஸ்வரி ராவ், செய்தியாளராகவும், நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். அரவிந்த் சித்தார்த்தா இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதற்கு பிறகு அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்காமல் இருந்த எம்.ஆர்.பாரதி, செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறார்.
எழுத்தாளர் நரன்
'இதுவும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான். எழுத்தாளர் நரன் எழுதிய தேடல், மரிய புஷ்பத்தின் சைக்கிள்கள் என்ற இரண்டு சிறுகதைகளையும் இணைத்து திரைக்கதை அமைத்துள்ளோம். வழக்கமானப் படமாக இல்லாமல், வித்தியாசமானதாக இந்தப் படம் இருக்கும். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க திட்டம் வைத்துள்ளோம்' என்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.
நடிகர், நடிகைகள்
இதை மணப்பாடு பின்னணியில், அதாவது கடற்கரையோர கிராமத்துப் பின்னணியில் எடுக்க இருக்கிறார்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. எழுத்தாளரும் கவிஞருமான நரனின் வாரணாசி உட்பட மேலும் இரண்டு சிறுகதைகள் சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.