Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'தொட்ரா'... ஷூட்டிங்கில் ஹீரோயினை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட மதுராஜ்
நடிகை வீணாவை அடித்ததற்காக தொட்ரா படத்தின் இயக்குனர் மதுராஜ் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
சென்னை: இயக்குனர் மதுராஜ், தொட்ரா படப்பிடிப்பின்போது கதாநாயகி வீணாவை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜே.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தொட்ரா'. இப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி கதாநாயகனாகவும், அறிமுக நடிகை வீணா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மதுராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நாயகி வீணாவை பளார் என இயக்குனர் அறைந்துவிட்டார்.
சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தபோது, அதன் முக்கியத்துவம் உணராமல், நடிகை வீணா ஜாலியாக இருந்ததாகவும், இதனால் கிட்டத்தட்ட 30 டேக்குக்கு மேல் போனதால் போகத்தில் அறைந்துவிட்டதாகவும் இயக்குனர் மதுராஜ் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில்,தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் மதுராஜ், படப்பிடிப்பின் போது நடிகை வீணாவை அடித்ததற்காக மேடையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தை பார்த்த என் குருநாதர் பாக்கியராஜ், என் பெயரை காப்பாற்றிவிட்டாய் என்றார். இதைவிட பெரிய விருது எனக்கு கிடைக்காது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்ததற்காக, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்த விழாவில் நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.