Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இணையத்தில் லீக்கானதா பொன்னியின் செல்வன்..படத்தை வைத்து ஆன்லைன் மோசடி!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் மெகா மோசடி ஒன்று நடந்துள்ளது.
பிற்கால சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுத்தாளர் கல்கி உருவாக்கிய புதினம் பொன்னியின் செல்வன்.
இந்த நாவலை படித்தவர்கள் ஆழ்வார்க்கடியார் நம்பி, நந்தினி, வந்தியத் தேவன் என அத்தனை கதா பாத்திரங்களுடனும் ஒன்றிப் போய்விடுவார்கள். இன்றளவும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு வாசிப்புச் சூழலில் பொன்னியின் செல்வன் மகத்தான நூலாக உள்ளது.
பொன்னியின் செல்வன்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை தற்போது மணிரத்னம் இயக்கி வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்.
எம்ஜிஆரே ஆசைப்பட்ட படம்
பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆரே எடுக்க ஆசைப்பட்ட படமாகும். ஆனால் பல காரணங்களால் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால் முக்கால் நூற்றாண்டுக்கு பின் மணிரத்தினத்தால் அது சாத்தியமாகியுள்ளது. படத்தின் டிரைலர் ப்ரோமோஷன்,டீசர், பாடல் என அனைத்தும் மக்களுக்கு பெரியவிருந்தாக அமைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுறவைத்துள்ளது. வரலாற்று சரித்திர புகழ் பெற்ற இத்திரைப்படம் இன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
அற்புதமான படைப்பு
ரவி வர்மனின் கேமராவில் ஒவ்வொரு காட்சியும் அழகும் புத்துயிரும் பெறுகிறது. தோட்டா தரணியின் அற்புதமான கலை, ஏகா லக்கானியின் ஆடை வடிவமைப்பு என படத்தை ரசிகர்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வர்ணித்து புகழ்ந்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படம் டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாக, படத்தின் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் டெலிகிராமில் குவிந்தனர். ஆனால், அந்த டெலிகிராம் லிங்கை க்ளிக் செய்துள்ளனர். ரூ 45 தொகையை கட்டணமாகச் செலுத்தினால் படத்தை டவுன்லோடு செய்து பார்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஏமாந்த ரசிகர்கள்
இதையடுத்து, பலரும் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்திய பல மணி நேரமாகியும் படம் வராமல் லோடிங் லோடிங் என்று வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகுதான், லோடிங் மட்டும் தான் வரும் படம் வராது என்பதை புரிந்து கொண்டு இணையத்தில் புலம்பி வருகின்றனர்.