Don't Miss!
- Automobiles உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்
சென்னை: இயக்குநர் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று வீடு திரும்பியுள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய கோளாறு பிரச்சனை இருப்பதால் அது தொடர்பாக மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை, தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
#News23 Updates
— Nikkil (@onlynikil) June 17, 2019
After a routine Check up Maniratnam sir back to office today with his routine work
All is Well...@hasinimani @MadrasTalkies_ pic.twitter.com/qxHGbiV4kM
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் மணிரத்னத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு 2015ம் ஆண்டு இதய பிரச்சனை தொடர்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்ததும் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
மணிரத்னம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் மணிரத்னம் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் பெரிய பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற நாவலை எல்லாம் படமாக எடுக்கக் கூடாது, எடுக்கவும் முடியாது. மேலும் மணிரத்னம் தேர்வு செய்துள்ள சில நடிகர்கள், நடிககைள் அந்த கதாபாத்திரங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
படம் பார்ப்பவர்களுக்கே இப்படி தோன்றினால் படத்தை எடுக்கப் போகிறவர் யோசிக்காமலா செய்வார். அவர் கனவு படத்தை எடுக்கட்டுமே, பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்போம்.