twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினர் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற 3 பேர் கைது

    |

    தேனி: திரைப்பட இயக்குனர் மானோஜ்குமாரின் உறவினருக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 2003ம் ஆண்டு திரைப்பட இயக்குனர் மனோஜ் குமாரின் உறவினர் சின்னுவின் தந்தை பெயரை பயன்படுத்திய ஒரு கும்பல், போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயார் செய்து, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது.

    இது குறித்து காவல்துறையினரிடன் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேனி நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் தனது 12 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தருமாறு சின்னு புகார் அளித்தார்.

    அதன்பேரில் அல்லி நகரத் சேர்ந்த அய்யர், கருப்பையா, பாலன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை சின்னுவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

    English summary
    Noted film director Manoj Kumar's relative Chinnu's land has been sold by using fake documents. Theni police arrested 3 persons in this case and searching 9 others.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X