Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்..அந்த ஆசிரியரை சாகும்வரை தனி சிறையில் அடையுங்கள்.. பிரபல இயக்குநர் ஆவேசம்!
சென்னை: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை சாகும் வரை தனி சிறையில் அடைக்க வேண்டும் என பிரபல இயக்குநர் கொந்தளித்துள்ளார்.
Recommended Video
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொள்வதாக பாலியல் புகார் எழுந்துள்ளது.
ராட்சசன் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.. இயக்குநர் ராம்குமார் பகீர் ட்வீட்
இந்தப் பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலன்.
இவர் மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவது, ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது என முன்னாள் மாணவ மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரியர் மீது புகார்
மேலும் மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வாட்ஸ்அப் மெஸேஜ்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியருக்கு கண்டனம்
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெஸேஜ்களை டெலிட் செய்தது தெரியவந்தது. ஆசிரியர் ராஜகோபாலனின் இந்த செயலுக்கு அரசியல் பிரமுகர்கள் திரை நட்சத்திரங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராஜகோபாலன் கைது
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்றிரவு அவரை கைது செய்தனர்.
பிரபல இயக்குநர் காட்டம்
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை சாகும் வரை தனி சிறையில் அடைக்க வேண்டும் என பிரபல இயக்குநர் கொந்தளித்துள்ளார்.
பாலியல் தொல்லைகள்
வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி. ஆசிரியர் ராஜகோபாலன் தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தைரியமாக தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள புகாராக அளித்த அந்த மாணவிக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்..
சாகும் வரை தனி சிறை
ஆசிரியர் வர்க்கத்திற்கு களங்கம் ஏற்படுத்திய அந்த மிருகத்தை சாகும் வரை தனி சிறையில் அடையுங்கள்.. தண்டணைகள் கடுமையாக தர பட்டால் தான் பயம் முளைக்கும்.. இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.