Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நோய் தீராது.. ஆனால் வலிமையான எண்ணம் ஏற்படும்.. மோடி யோசனைக்கு திரௌபதி இயக்குநர் ஆதரவு!
சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கேற்றக் கூறிய பிரதமர் மோடிக்கு திரௌபதி இயக்குநர் மோகன் ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி வீடியோ மெஸேஜ் வெளியிட்டார். அப்போது ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தரும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.
இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது இந்த கோரிக்கையை அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் விமர்சித்தும் ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் மனவலிமையை, இறையாண்மையை, ஒற்றுமையை காட்டுவோம்.. இப்படி செய்தால் நோய் தீருமா என்றால் இல்லை தான்.. ஆனால் நமக்குள் ஒரு வலிமையான எண்ணம் ஏற்படும் என்பதற்காக ஒன்று படுவோம்.. கொரனாவிற்கு எதிராக அனைவரும் மனவலிமையுடன் ஒன்றுபடுவோம்.. #LightForIndia pic.twitter.com/A5sPM9dkvQ
— Mohan G 🔥😎 (@mohandreamer) April 3, 2020
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தேசத்தின் மனவலிமையை, இறையாண்மையை, ஒற்றுமையை காட்டுவோம்.. இப்படி செய்தால் நோய் தீருமா என்றால் இல்லை தான்.. ஆனால் நமக்குள் ஒரு வலிமையான எண்ணம் ஏற்படும் என்பதற்காக ஒன்று படுவோம்.. கொரனாவிற்கு எதிராக அனைவரும் மனவலிமையுடன் ஒன்றுபடுவோம்.. என தெரிவித்துள்ளார்.