Don't Miss!
- Technology Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- News ராணிப்பேட்டையில் சத்தமேயில்லையே.. வேலூர், திருப்பத்தூர் ரோட்டில் "அதை" கவனிச்சீங்களா? ஹைவேஸில் குஷி
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. எல்லை மீறியவரிடம் கொந்தளித்த இயக்குநர்!
சென்னை: தரக்குறைவாக பேசிய நெட்டிசனிடம் கொந்தளித்திருக்கிறார் பிரபல இயக்குநர்.
நாடகக் காதலை மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம் திரௌபதி. 50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 10 நாட்களில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.
பல்வேறு சமூகத்தினரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். குடும்பம் குடும்பமாக சென்று பார்த்ததால் தியேட்டர்கள் களைகட்டின.
தரக்குறைவாக
அதே நேரத்தில் இப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தை வண்ணாரப் பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்தார். படத்தின் ட்ரெயிலர் வெளியான நாளில் இருந்தே ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக கிளம்பியது. இதனால் சமூக வலைதளங்களில் இயக்குநர் மோகன் ஜியை சில நெட்டிசன்கள் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.
சேது மரணம்
மோகன் ஜி பொதுவாக ஏதாவது பேசினாலும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மருத்துவருமான சேதுராமன் நேற்று முன்தினம் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்தனர்.
நம்ப முடியவில்லை
அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜியும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பான பதிவில் இயற்கை பல பாடங்களை கற்பித்துக் கொண்டு இருக்கிறது நமக்கு.. இன்னும் நம்பமுடியவில்லை.. என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டனர். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜியும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பான பதிவில் இயற்கை பல பாடங்களை கற்பித்துக் கொண்டு இருக்கிறது நமக்கு.. இன்னும் நம்பமுடியவில்லை.. என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டனர்.
|
அவரும் 1985..
ஆனால் சில நெட்டிசன்கள் அதனையும் கடுமையாக விமர்சித்தனர். ஒரு நெட்டிசன், அந்த மனுசனும் 1985 நீயும் 1985 வருசம் சீக்கிரம் நல்ல செய்தி எதிர் பாக்கலாம் என்று கூறினார். இதனை பார்த்து கொதித்து போன இயக்குநர் மோகன், உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. அடுத்த சம்பவம் தரமா வருவதற்கு உன்ன மாதிரி ஆளுங்களோட ட்வீட் தான் காரணமா இருக்க போகுது.. இன்னும் கதறுங்க.. என பதிவிட்டுள்ளார்.
|
சிஸ்டம்ல பிரச்சனை
இதேபோல் மற்றொரு நெட்டிசன், ஆமா ஆமா நம்ப முடியல தான் நீ லாம் உசுரோட இருக்கியே!!? என்று கேட்டுள்ளார். அதற்கும் அசராமல் பதில் கூறியிருக்கிறார். அதாவது பெயரில் இருக்கும் ஆரோக்கியம் குணத்தில் இல்லை.. படத்தை பார்த்த அப்பறம் இவ்வளவு வன்மமாக இருக்கீங்கனா உங்க சிஸ்டம்ல ஏதோ பிரச்சினை இருக்கு.. இனி ஆட முடியாது ஆரோக்யம்.. அடக்கிடுவாங்க.. திருந்துங்க.. என பதிவிட்டுள்ளார்.
|
நாங்க பாத்துக்குறோம்
இயக்குநர் மோகனின் இந்த டிவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோகனின் டிவிட்டை பார்த்த இவர், இவனுங்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டாம் சகோ... நீங்கள் இன்னும் அதிகமா கதற விடும் வேலையில கான்சென்ட்ரேட் பண்ணுங்க சகோ.. இவனுங்கள நாங்க பாத்துக்கறோம் என்று கூறியிருக்கிறார்.