Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சத்துணவு பணியாளர் பாப்பாளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர்!
சென்னை: இயக்குனர் நவீன் சத்துணவு பணியாளர் பாப்பாள் பிரச்சனை குறித்து ட்வீட் செய்துள்ளார்.
மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நவீன் இப்போது அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள திருமலைக்கவுண்டம்பாளைய அரசு உயர்நிலைப் பள்ளியில் பாப்பாள் என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சமையல் வேலையில் ஈடுபடக்கூடாது என சில மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பிறகு, பாப்பாளை சாதியின் பெயரைச் சொல்லி திட்டுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 89பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகவும், அதனால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பாப்பாள் கவனக்குறைவாக இருந்ததால் தான் உணவில் பல்லி விழுந்தது என தலைமை ஆசிரியை சசிகலா அவினாசி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
நூற்றாண்டுகள் கடந்தும் உங்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். அடிப்படை மனித வாழ்வை கூட வாழ்ந்து பார்த்திட கூடாது. அப்படித்தான?#justiceforpappammal https://t.co/oDUfcLdAZw
— Naveen.M (@NaveenFilmmaker) August 9, 2018
அதை மறுத்துள்ள பாப்பாள், பவித்ரா என்ற மாணவி மதிய உணவை வாங்கி வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றதாகவும். அதன்பிறகு தலைமை ஆசிரியை சசிகலா வந்து, மாணவியின் தட்டிலிருந்து பல்லியை எடுத்துக்காட்டி உணவில் பல்லி விழுந்துவிட்டது சாப்பிட வேண்டாமென்று கூறி செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டார் எனவும், பிறகு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
தீண்டாமைக்கொடுமை குறித்து பாப்பாள் ஏற்கனவே புகாரளித்து அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால், சமைத்த உணவை கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சிறிதளவு தனியாக எடுத்து வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.
மேலாதிக்க குரூர எண்ணத்தோடு, இறந்த பல்லியை மறைத்துவைத்து பழிசுமத்துவதாக பாப்பாள் புகார் அளித்துள்ளார்.
ட்விட்டரில் அந்த புகார் மனு ஒருவரால் பகிரப்பட்டுள்ளது. அதை ரீட்வீட் செய்துள்ள நவீன், "நூற்றாண்டுகள் கடந்தும் உங்களுக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டும். அடிப்படை மனித வாழ்வை கூட வாழ்ந்து பார்த்திட கூடாது. அப்படித்தானே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.