Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடக்க முடியாத துயரம்.. முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள்ணா.. பா ரஞ்சித் உருக்கம்!
சென்னை: நடிகர் மாறனின் மரணம் கடக்க முடியாத துயரம் என இயக்குநர் பா ரஞ்சித் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர்களில் ஒருவர் மாறன். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தார்.
அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாறனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆதிவாசி கேரக்டர்
இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 48 வயதே ஆன மாறன் 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் நடித்திருந்தார். இதில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேடை கச்சேரிகள்
தொடர்ந்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்தார் நடிகர் மாறன்.
பிரபலங்கள் இரங்கல்
மாறன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடக்க முடியாத துயரம்
அந்த வகையில் இயக்குநர் பா ரஞ்சித் உருக்கமாக டிவிட் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடக்க முடியாத துயரம்.. எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! என குறிப்பிட்டுள்ளார்.
நம்ப முடியவில்லை
இதேபோல் நடிகர் ஆர்யாவும் நடிகர் மாறனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாறன் அண்ணா குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதை நம்ப முடியவில்லை. உங்களை மிஸ் பண்ணுவோம் அண்ணா என பதிவிட்டுள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!