Don't Miss!
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
எஸ்பி ஜனநாதன் மறைவு.. கதறி அழுத பா ரஞ்சித்.. அரசியல் கட்சியினரும் அஞ்சலி!
சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பா ரஞ்சித், அவரது உடலை பார்த்து கதறியழுதார்.
Recommended Video
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன்.
கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பெரும் அதிர்ச்சி
இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி அஞ்சலி
அவரது வீட்டில் எஸ்.பி.ஜனநாதனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் நாசர், அருண் விஜய், இயக்குநர்கள் சேரன், பா.ரஞ்சித், அமீர், லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கதறி அழுத ரஞ்சித்
எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தும்போது இயக்குநர் பா.ரஞ்சித் உடைந்து கதறி அழுதார். மேலும் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டாலின் இரங்கல்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் ட்விட்டர் மூலம் ஜனநாதனின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.