twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்பி ஜனநாதன் மறைவு.. கதறி அழுத பா ரஞ்சித்.. அரசியல் கட்சியினரும் அஞ்சலி!

    |

    சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பா ரஞ்சித், அவரது உடலை பார்த்து கதறியழுதார்.

    Recommended Video

    கனத்த இதயத்தோடு விடை தருகிறோம் | SP JANANATHAN Last rites

    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன்.

    கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இறுதி அஞ்சலி

    இறுதி அஞ்சலி

    அவரது வீட்டில் எஸ்.பி.ஜனநாதனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் நாசர், அருண் விஜய், இயக்குநர்கள் சேரன், பா.ரஞ்சித், அமீர், லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    கதறி அழுத ரஞ்சித்

    கதறி அழுத ரஞ்சித்

    எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தும்போது இயக்குநர் பா.ரஞ்சித் உடைந்து கதறி அழுதார். மேலும் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    ஸ்டாலின் இரங்கல்

    ஸ்டாலின் இரங்கல்

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் ட்விட்டர் மூலம் ஜனநாதனின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Director Pa Ranjith breaks down while pays tribute to SP Jananathan. SP Jananathan passed away yesterday due to illness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X