Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனித்தொகுதி மட்டுமில்லாமல் பொதுத்தொகுதியிலும் வெற்றி.. திருமாவை வாழ்த்திய பிரபல இயக்குநர்!
சென்னை: சட்டசபை தேர்தலில் நான்கு இடங்களில் முன்னிலை வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதுக்கே வாய பொளக்றீங்க.. அப்போ அதை என்ன சொல்வீங்க? மனோ பாலாவிடம் வரிந்துக்கட்டிய நெட்டிசன்ஸ்!
இதில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிலும் தனித்தொகுதி மட்டுமின்றி பொதுத்தொகுதியிலும் விசிக போட்டியிட்டது.
6 தொகுதிகளில் போட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகையில் ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் போட்டியிட்டனர். இதேபோல், வானூர் தொகுதியில் வன்னி அரசும், திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ் பாலாஜியும், அரக்கோணம் தொகுதியில் கவுதம் சன்னாவும் போட்டியிட்டனர்.
திருப்போரூரில் வெற்றி
இதில் நாகை தொகுதியில் போட்டியிட்ட ஆளுர் ஷானவாஸ் வெற்றி பெற்றுள்ளார். திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜியும் வெற்றி பெற்றுள்ளார். மற்ற இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னிலையில் உள்ளது.
பா ரஞ்சித் வாழ்த்து
இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநரான பா ரஞ்சித் திருமாவளவனுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
2 பொது தொகுதியிலும்
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சாதிய மதவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக தன்னையும், தன்னை சார்ந்த தொண்டர்களையும் வழி நடந்தி, பிடிவாதமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தொகுதியில் மட்டும் இல்லாமல் இரண்டு பொதுதொகுதியிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிக& தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.