Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவகார்த்திக்கேயனுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை..? இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்
சிவகார்த்திக்கேயனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கும், தனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
பசங்க, பசங்க 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திக்கேயனை தனது மெரினா படம் மூலம் நடிகராக்கியவர்.தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிவகார்த்திக்கேயன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய படவிழாவில் இருவரும் சரிவர பேசிக் கொள்ளாததால், அவர்களிடையே பிரச்சினை என தகவல் பரவியது. அதாவது தனது புதிய படத்திற்காக பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை அணுகியதாகவும், ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு எனவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ளார் பாண்டிராஜ். 'எனக்கும், சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. விழா தொடங்குவதற்கு முன்னதாக இருவரும் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழா மேடையில் பரபரப்பில் நடந்த கவனக்குறைவை பெரிய விசயமாக்கி, எனக்கும் சிவகார்த்திக்கேயனுக்கும் பிரச்சினை என தவறான தகவல் பரவி விட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.