Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிவகார்த்திக்கேயனுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை..? இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்
சிவகார்த்திக்கேயனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கும், தனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
பசங்க, பசங்க 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திக்கேயனை தனது மெரினா படம் மூலம் நடிகராக்கியவர்.தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிவகார்த்திக்கேயன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய படவிழாவில் இருவரும் சரிவர பேசிக் கொள்ளாததால், அவர்களிடையே பிரச்சினை என தகவல் பரவியது. அதாவது தனது புதிய படத்திற்காக பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை அணுகியதாகவும், ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு எனவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ளார் பாண்டிராஜ். 'எனக்கும், சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. விழா தொடங்குவதற்கு முன்னதாக இருவரும் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழா மேடையில் பரபரப்பில் நடந்த கவனக்குறைவை பெரிய விசயமாக்கி, எனக்கும் சிவகார்த்திக்கேயனுக்கும் பிரச்சினை என தவறான தகவல் பரவி விட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.