twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனை ப்ரோமோஷனுக்கு அனுமதிக்காத லீடிங் சேனல்கள்: அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு!

    |

    சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ லிஸ்ட்டில் இணைந்துள்ள சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தில் நடித்திருந்த போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை இயக்குநர் பாண்டிராஜ் மனம் திறந்துள்ளார்.

     ஹாலிவுட் போய்விட்டோம் அடுத்து?..பெரிய ஆளுன்னா யார்? ..மீண்டும் வலுக்கிறதா சிம்பு-தனுஷ் மோதல் ஹாலிவுட் போய்விட்டோம் அடுத்து?..பெரிய ஆளுன்னா யார்? ..மீண்டும் வலுக்கிறதா சிம்பு-தனுஷ் மோதல்

    விஜய் டிவியில் இருந்து சிறகடித்த எஸ்கே

    விஜய் டிவியில் இருந்து சிறகடித்த எஸ்கே

    தமிழில் முன்னணி பொழுதுப்போக்கு சேனலான விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் முகம் காட்டினார் சிவகார்த்திகேயன். போட்டியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என வெரைட்டியாக மக்களை கவர்ந்த சிவகார்த்திகேயனுக்கு முதன்முதலாக 'மெரினா' படத்தில், நடிக்கும் வய்ப்புக் கிடைத்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் 2012ல் வெளியான இந்தப் படம், சிவகார்த்தியேனை வெள்ளி திரையில் சிறகடிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

    மெரினா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்

    மெரினா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்

    சிவகார்த்திகேயன், ஓவியா, ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்தது. இங்கிருந்து தொடங்கிய சிவகார்த்திகேயனின் பயணம், இப்போது லீடிங் ஸ்டார், 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் கன்ஃபார்ம் என்ற டாப் ஹீரோவாக அடையாளப்படுத்தியுள்ளது. இதற்காக சிவகார்த்திகேயன் எடுத்த முயற்சிகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்நிலையில், மெரினா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

    சிவகார்த்திகேயனை புறக்கணித்த முன்னணி தொலைக்காட்சிகள்

    சிவகார்த்திகேயனை புறக்கணித்த முன்னணி தொலைக்காட்சிகள்

    சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஹீரோவாக நடித்த மெரினா படத்தின் ப்ரோமோஷனுக்கு பல முன்னணி தொலைக்காட்சிகளை இயக்குநர் பாண்டிராஜ் அணுகியுள்ளார். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வந்தவர் என்பதால், அவரை பேட்டியெடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் மறுத்துவிட்டதாக மனம் திறந்துள்ளார்.

    இப்போ சிவகார்த்திகேயன் தான், அந்தக் காலம் மாறிப்போச்சு

    இப்போ சிவகார்த்திகேயன் தான், அந்தக் காலம் மாறிப்போச்சு

    முதல் படமான மெரினாவின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் அவரது பேட்டிக்காக இப்போது காத்திருக்கின்றன. பல முன்னணி ஹீரோக்களின் திரைப்பட விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேறலெவலில் சம்பவம் செய்துவருகிறார் சிவகார்த்திகேயன். அவரது படங்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு, சிவகார்த்திகேயனை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்களில் தனக்கான தனி அடையாளத்தை பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். இதுவே அவரது பெரிய வெற்றியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

    English summary
    Sivakarthikeyan became a leading actor in Tamil cinema in a short period. Sivakarthikeyan made his film debut with the film Marina and is now seen as a busy actor. In this case, director Pandiraj said that leading TV channels refused to interview Sivakarthikeyan during the promotion of Marina.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X