Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கலாநிதி மாறன் முன்னாடியே சொன்னாரு... பாண்டிராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், வினய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது எதற்கும் துணிந்தவன்.
இந்தப் படம் சிறப்பான வசூலை முதல் நாளிலேயே பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் வீடியோ மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
என் வாழ்க்கையில் இனிமே அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்.. புதிய சபதம் எடுத்த யாஷிகா ஆனந்த்!
எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், புகழ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றை தினம் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திரையரங்கில் சூர்யா படம்
திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு படம் உள்ளாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பெண்களுக்கு எதிரான விஷயத்தை பேசியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
இடையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சூர்யா நடித்திருந்தார். ஆனால் இந்த இரு படங்களும் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகியிருந்தது. இந்த இரு படங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையிலும் திரையரங்குகளில் ரிலீசாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
கமர்ஷியல் பக்கம் திரும்பிய சூர்யா
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் மூலம் மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பியுள்ளார் சூர்யா. படம் துவங்குவதற்கு முன்பு அவரின் மாஷ் அப் ஒன்றும் திரையிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மிஸ் பண்ணிடாதீங்க என்று ட்வீட் செய்துள்ளார்.
பாண்டிராஜ் வீடியோ
மேலும் படம் குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது படத்தை இரண்டாவது முறையாக தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கதையை கலாநிதி மாறனுக்கு சொன்ன போது அவர் கண்டிப்பாக இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும் என்று கணித்ததையும் அவர் கூறியுள்ளார்.
கொண்டாட்டமான படம்
அனைவரும் கொண்டாடும்வகையில் படம் அமைந்துள்ளதாகவும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாசிட்டிவ் கமெண்ட் அளித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.