Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'சினிமாவில் கிடைக்கும் பிரபலம் மூலம் நல்லது செய்யும் மைம் கோபி!'- பாண்டிராஜ் பாராட்டு
சென்னை: ஜி மைம் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
கபாலியில் ரஜினியுடன் நடித்துள்ள கோபி ஆண்டுதோறும் தனது 'மைம்' நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இந்த ஆண்டு ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மா என்ற நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை நடத்தினார்.
அரங்கு நிரம்பி வழிந்தது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களால்.
நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .
விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், "மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழச்சி ...தனக்கு கிடைக்கும் சினிமா புகழைப் பயன்படுத்தி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன்.
சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும், நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .
நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன். இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம். கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல இயக்குநராக எனக்குத் தெரிகிறார். தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு," என்றார்.
இயக்குநர் கரு பழனியப்பன், கோபியின் முயற்சிகளைப் பாராட்டினார். மைம் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவில் இயக்குநர்கள் சுசீந்திரன், மகிழ் திருமேனி, பாலாஜி மோகன், சிவா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் கிஷோர், காளி வெங்கட், சரவணன், பாண்டி, முரளி, ஆத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?
-
சேஷு உயிரிழக்க காரணமே இதுதான்.. அவர்கிட்ட இருந்து இதை மட்டும் கத்துக்காதீங்க.. நடிகர் பழனி பகீர்!