Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொரோனா லாக்டவுனால் அதிரடியாக மாறிய வாழ்க்கை.. சொந்த ஊரில் விவசாயம் செய்யும் பிரபல இயக்குனர்!
சென்னை: லாக்டவுனுக்கான நேரத்தை விவசாயம் செய்ய பயன்படுத்துக்கொண்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களை மிரட்டி வருகிறது. இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் இந்த தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
டீசர், போஸ்டரை கண்ட இயக்குனர் அதிர்ச்சி.. பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு கோர்ட் இடைக்கால தடை!
கொரோனா பாதிப்பு
இந்தியாவில், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19,693 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,433 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 2,53,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்கறிகள், பழங்கள்
இந்த கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மற்றத் துறைகளை போல சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில நடிகர்கள், காய்கறிகள், பழங்கள் விற்று தங்கள் கஷ்டத்தைப் போக்கி வருகின்றனர். மராத்தி நடிகர் ஒருவர் கருவாடு விற்று வருகிறார். கேரள நடிகர் ஒருவர் மீன் கடை போட்டுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ்
சிலர் இந்த லாக்டவுனை பயன்படுத்தி விவசாயத்துக்குத் திரும்பி உள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பண்ணை வீட்டில்தான் இந்த லாக்டவுன் காலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜூம், விவசாயத்துக்குத் திரும்பி இருக்கிறார். அவர் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.
செய்ய முடியாது
அவர் கூறும்போது, 'லாக்டவுனுக்கு முன்பே எனது சொந்த ஊரான விராச்சிலைக்கு வந்துவிட்டேன். எனது அப்பாவால் விவசாயம் செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலத்தில் கிணறு வெட்டி விவசாயப் பணிகளை செய்துவருகிறேன். என் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் காலையிலேயே நிலத்துக்குச் சென்று விடுகிறோம்.
மகிழ்ச்சி
வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளோம். மா, தென்னை செடிகள் நட்டுள்ளோம். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் ஈடுபட்டு வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.