Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு.. பார்த்திபனின் சூப்பர் பரிசு !
சென்னை : இயக்குனர் பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
Recommended Video
கொடூர அரக்கன் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உலக நாடுகளே செய்வது அறியாது ஸ்தம்பித்துள்ளன. இந்தியா முழுவதும் ஏப்ரல் 21ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜய்பாஸ்கர், ஏசி அறையில் இருந்து கட்டளையிடாமல், மருத்துவமனை ஆய்வு, அதிகாரிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்கள் சந்திப்பு என களத்தில் இறங்கி செயல்படுகிறார் இதற்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களை சந்தித்து பாராட்டிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் "மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு" என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.
இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத்தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல்பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் சுற்றிக்காட்டினார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல பலரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் சேவைகளை பாராட்டி வருகின்றனர். இவரின், செயலால் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.