Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒருவர் வேடத்தில் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது.. 800 படம் குறித்து இயக்குநர் பேரரசு அதிரடி!
சென்னை: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இயக்குநர் பேரரசு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
இதுதொடர்பான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. போஸ்டர் வெளியானது முதலே பிரச்சனைதான்.
மேகத்துக்கு மேல.. உயரத்தில் நிற்கும் அமலா பால்.. நவராத்திரி பற்றி அப்படி ஒரு பதிவு!
எதிர்ப்பும் ஆதரவும்
ஈழத் தமிழர்களுக்கு எதிரானவரான முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கண்டனக் குரல்களும் நடிப்பதால் என்ன என ஆதரவு குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
வரவேற்கக்கூடிய விஷயம்
இந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் படத்தில் நடிப்பது குறித்து எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"முத்தையா முரளிதரன் தமிழின துரோகி!
விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!
அவரின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக்குரல்கள், எதிர்ப்புக்குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!
ஏன் ஒலிக்கவில்லை?
இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள்
'விடுதலை புலிகள்' தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று? தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???
Recommended Video
ஒப்படைக்க துடிக்கிறீர்களே!
விடுதலை புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???
மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள்,
தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!!!
இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!
வேடதாரிகளுக்கு எதிரானது
ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து வி டும்! இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல!
சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது!" இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.