Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...
இப்போதெல்லாம் இயக்குநர் பேரரசுவை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. அவரும் குண்டக்க மண்டக்க பேசி வைக்கிறார்.
சமயத்தில் அவர் பேச்சு ரசிக்கும்படியும் அமைந்துவிடும்.
சமீபத்தில் கைபேசி காதல் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்' சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் இது.
இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. திம்மம்பள்ளி சந்திரா என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
விழாவில் பேசிய பேரரசு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.
எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர், "திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக் கூடியது.
திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?
திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார். பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்," என்றார்.