Don't Miss!
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...
இப்போதெல்லாம் இயக்குநர் பேரரசுவை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. அவரும் குண்டக்க மண்டக்க பேசி வைக்கிறார்.
சமயத்தில் அவர் பேச்சு ரசிக்கும்படியும் அமைந்துவிடும்.
சமீபத்தில் கைபேசி காதல் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்' சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் இது.
இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. திம்மம்பள்ளி சந்திரா என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
விழாவில் பேசிய பேரரசு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.
எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர், "திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக் கூடியது.
திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?
திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார். பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்," என்றார்.