Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் எதுக்கு? - புதுமுகங்களுக்கு பேரரசு அட்வைஸ்
புதுமுக நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார் இயக்குநர் பேரரசு.
ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தேவன் நடிக்கும் "காதல் பஞ்சாயத்து" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர் மற்றும் இயக்குனர்களுக்குக் கூறியதாவது:
"இப்போதெல்லாம் முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள். முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள். அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும்.
படிப்படியாக வளருங்கள். மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அந்த மாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
நான் திருப்பாச்சி படத்தை இயக்கிய போது விஜய் அக்ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகி விட்ட நேரம் "நீ எந்த ஊரு நான் எந்த ஊரு" என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம் அதை கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று கேட்டார்.அவரை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தேன் அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு," என்றார்.
தமிழன் நடித்த படத்துக்கு எதிர்ப்பா?
ஜாக்குவார் தங்கம் பேசுகையில், "ஒரு தமிழன் நடித்த தெனாலிராமன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.
நீங்கள் தடுத்துப் பாருங்கள், நாங்கள் திரண்டு வந்து தற்கொலை படையாக மாறிக் கூட படத்தை திரையிட வைப்போம். மீறி தடுத்துத்தான் பாருங்களேன்.." என்றார்.
விழாவில் கலைபுலி .எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன், பட்டியல் சேகர்,இயக்குனர் சுராஜ், இயக்குனர் கலைசங்கர், நடிகர் தேவன் ஆகியோர் பேசினர்.