Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிரபு சாலமனின் காடன்.. 10 வருட கதை.. யானை தான் ஹீரோ.. செம படம்!
Recommended Video
சென்னை : பிரபு சாலமன் இயக்கி இருக்கும் திரைப்படம் காடன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அந்த படத்தை பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.
கண்ணோடு காண்பதெல்லாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இயக்குனர் பிரபு சாலமன். இதனை தொடர்ந்து கிங், கொக்கி, லீ, லாடம் போன்ற படங்களை இயக்கினார்.
இந்த படங்கள் அனைத்திற்கும் பிறகு இவருக்கு ஒரு கம்பேக் ஆக அமைந்தது இவர் இயக்கிய " மைனா" திரைப்படம். ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார் பிரபு சாலமன்.
இதனை அடுத்து சிவாஜி பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை வைத்து கும்கி என்ற படத்தை இயக்கினார் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் பின் கயல் மற்றும் தொடரி போன்ற படங்களை இயக்கியுள்ளார் பிரபு சாலமன்.
தற்போது இவர் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் "காடன்" இத்திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியில் "ஹாத்தி மேரே சாத்தி" என்றும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏராஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
இப்படத்தை பற்றி பிரபு சாலமன் கூறுகையில், இப்படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஹீசைன் போன்றோர் நடித்துள்ளனர். படத்தில் யானை தான் ஹீரோ யானையின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த உன்னி கிருஷ்ணணை தான் கும்கி படத்திலும் பயன்படுத்தினோம். விஷ்ணு விஷால் யானை மீது ஏறி உட்கார பல தடவை பயிற்சி எடுத்தார்.
உன்னி யானையால் மட்டும் தான் இந்தியா சினிமாவில் நடிக்க முடியும் அந்த யானைக்கு தான் தகுந்த சான்றிதழ் உள்ளது. 7 அடர்ந்த காடுகளில் 200 நாட்களுக்கு மேல் இப்படத்தை படமாக்கினோம். முக்கிய காட்சிகளை தாய்லாந்து மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டது.
ஜாதவ் பியான் தான் இந்த கதை அமைய காரணம் அவரை வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளேன். பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதை இதனை படமாக எடுத்துள்ளேன் என கூறினார் இயக்குனர் பிரபு சாலமன். ஏராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு இந்த படம் ஒரு சிறந்த கம்பெக் ஆக அமையும் என்று ரசூல் பூக்குட்டியின் உழைப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது என்றும் பேசினார் இயக்குனர் பிரபு சாலமன்.
ஷாந்தனு மொய்தர இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். விழாவில் இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் நடிகர்கள் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.