Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சட்டப்படி அடிப்பது தவறு..மனித நேயமற்ற செயல்.. கோமாளி இயக்குனர் !
சென்னை : கோமாளி பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் ஊரடங்கு குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று எவ்வளவு கூறியும் சிலர் இரு சக்கர வாகனத்தில் ஊர் கூற்றி வருகின்றனர். இதனால் போலீசார் ஒரு சிலரை அடித்தும், தோப்புக்கரணம் போடவைத்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறிவருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், விதிகளை மீறி சாலையில் சுற்றுபவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு இருக்கிறது. ஆனால், அடிக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்படி அடிப்பது தவறு இதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இது மனித நேயமற்ற செயல்.
அந்த மாதிரி சூழ்நிலையில் கைதாவதை தவிருங்கள், ஜெயிலுக்கு போவதற்கு பதிலாக இரு அடிகளை வாங்கி கொண்டு தப்பிப்பது தான் சரி, அதை விட சிறந்தது வீட்டில் இருப்பது என்று மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் சில விஷயங்களை பகிர்ந்துள்ள பிரதீப், தான் கல்லூரி நாட்களில் இருந்தே அதிக நேரம் வீட்டில் இருப்பவன். விடுமுறை என்றால் கூட வெளியே செல்ல மாட்டேன் வீட்டில் உக்காந்து படம் பார்ப்பேன் அதனால், இந்த ஊரடங்கு எனக்கு எளிதாக உள்ளது.
தற்போது ஊரடங்கினால் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகள் 21 நாட்கள் தள்ளி போவது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த 21 நாட்களில் அதை சமன் செய்ய கதை ரீதியான வேலைகளில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். தற்போதைய சூழ்நிலையில் கணினியில் படம் டவுன்லோடு செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதனால், இசையை கற்று வருவதாக கூறியுள்ள பிரதீப், நான் இசை கற்று வருவது ஹிப்ஹாப் தமிழாவுக்கு தெரியக் கூடாது அப்படி தெரிந்தால் என்னை அவர் கிண்டல் செய்வார் என்று ஜாலியாக கூறியுள்ளார் .
இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில், அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதில் எந்த குறையும் இல்லை, ஆனால் நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சில நாட்களுக்கு முன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்தை பார்த்தது வேதனை அளித்தது. அதில் அரசாங்கத்தின் தவறும் இருக்கிறது மக்கள் அந்த நேரத்தில் பயணத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.