Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்
திருச்சூர்: பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிரபல மலையாள இயக்குனர் மீது சாணத்தை வீசி தாக்கியுள்ளனர்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியநந்தனன். அவர் இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவர். இந்நிலையில் திருச்சூரில் உள்ள அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மீது ஒருவர் சாணத்தை வீசி தாக்கியுள்ளார்.
பிரியநந்தனனின் தாக்குதலை கண்டித்துள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன் இதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரியநந்தனன் கூறியிருப்பதாவது,
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு நான் ஆதரவு தெரிவித்த உடனே பாஜகவினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் மேலும் என் வீட்டின் அருகே போராட்டமும் நடத்தினார்கள். நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். தற்போது ஒருவர் என் மீது சாணத்தை வீசி பக்கெட்டால் தாக்கினார். இது குறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் தாக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.