Just In
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 16 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்!
- Lifestyle
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்
திருச்சூர்: பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிரபல மலையாள இயக்குனர் மீது சாணத்தை வீசி தாக்கியுள்ளனர்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியநந்தனன். அவர் இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவர். இந்நிலையில் திருச்சூரில் உள்ள அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மீது ஒருவர் சாணத்தை வீசி தாக்கியுள்ளார்.
பிரியநந்தனனின் தாக்குதலை கண்டித்துள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன் இதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரியநந்தனன் கூறியிருப்பதாவது,
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு நான் ஆதரவு தெரிவித்த உடனே பாஜகவினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் மேலும் என் வீட்டின் அருகே போராட்டமும் நடத்தினார்கள். நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். தற்போது ஒருவர் என் மீது சாணத்தை வீசி பக்கெட்டால் தாக்கினார். இது குறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் தாக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.