தூக்க மாத்திரை சாப்பிட்டு நித்யா மேனன் பட இயக்குனர் தற்கொலை முயற்சி
Recommended Video

மும்பை: எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தெலுங்கு திரைப்பட வசன எழுத்தாளரும், இயக்குனருமானவர் ராஜசிம்ஹா. அவர் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி.
ருத்ரமாதேவி படத்தில் தெலுங்கானா ஸ்லாங்படி பேச அல்லு அர்ஜுனுக்கு பயிற்சி அளித்தவர் ராஜசிம்ஹா.

நித்யா மேனன்
சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம்மாயி தப்ப என்ற படத்தை எடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தார் ராஜசிம்ஹா. இந்த படத்தை அடுத்து அவர் புதுப்படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

தமிழ்
அண்மையில் ராஜசிம்ஹா கன்னட திரையுலகில் கதை எழுதுபவராக அறிமுகமானார். அவர் தமிழ் திரையுலகிற்கும் செல்வதாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி
ராஜசிம்ஹா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மும்பையில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தம்
சினிமா தொழில் தொடர்பான பிரச்சனைகளால் ராஜசிம்ஹா கடந்த ஓராண்டு காலமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மன அழுத்தத்தால் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்வது புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











