Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு: நாங்களும் போட்டிதான்.. சவால்விடும் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளரை தேடி வலைவீச்சு!
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Finance
பெண்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம்..!
- Sports
தோனியால் விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டது.. இனி வருவங்களாம் பாலோ பண்ணணும்.. டிராவிட் கருத்து
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
கொலை வெறியில் இருக்கிறோம்.. ஜாக்கிரதையாக இருங்க ராஜமௌலி.. ராம்கோபால் வர்மாவின் ஷாக் ட்வீட்!
மும்பை : இந்தியாவில் இருக்கும் ஏராளமான இயக்குநர்கள் உங்கள் மீது கொலை வெறியில் இருக்கிறோம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ராஜமௌலிக்கு, ராம்கோபால் வர்மா ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இதில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா சரண்,அஜய்தேவ் கன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்.
ஆயிரம் கோடியை வசூலித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், கடந்த ஜனவரி 11ஆம் தேதி சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது.
கடவுளை பார்த்துவிட்டேன்... ஸ்டீவ் ஸ்பீல்பெர்க்கை பார்த்து நெகிழ்ந்த ராஜமௌலி !

ஆர்ஆர்ஆர்
நாட்டு நாட்டு குத்து பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றதை அடுத்து, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நாட்டு நாட்டு குத்து பாடல் இசையை நீங்கள் வித்தியாசமாக கையாண்டிருப்பதாகவும், இசையை அற்புதமாக கையாண்டதற்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார்.

ராஜமெளலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு
அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நாம் பேசலாம் எனவும் ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஹாலிவுட் படங்களின் ஜாம்பவனாக திகழும் ஜேம்ஸ் கேமரூன், ராஜமெளலிக்கு அழைப்பு விடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராம்கோபால் வர்மா
இந்நிலையில்,சர்ச்சையின் நாயகனான இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கே ஆசிப், ரமேஷ் சிப்பி, ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்களை ராஜமௌலி பின்னுக்கு தள்ளி முந்திவிட்டார் என்று கூறியுள்ளார்.

கொலை வெறியில் இருக்கிறோம்
மேலும், ராஜமௌலி சார் தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் இந்தியாவில் ஏராளமான திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பொறாமையால் உங்களைக் கொல்ல ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதில், நானும் ஒருவர். இப்போது நான் குடித்து இருப்பதால், இந்த ரகசியத்தை வெளியில் சொல்கிறேன் என்று ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் சர்ச்சையில்
பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக இருந்த ராம் கோபால் வர்மா, சினிமா குறித்தோ,அரசியல் குறித்தோ அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். தற்போது, 'ஆர்ஆர்ஆர்' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரித்ததை அடுத்து அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.