Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சூட்டிங்கை நிறைவு செய்த ராம் -நிவின் பாலி கூட்டணி... விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்
சென்னை : தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட உணர்ச்சிப்பூர்வமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராம். இவரது படங்களில் லீட் கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தற்போது நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்களை வைத்து இவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.
விஜய்யை
விட
ஒரு
படி
மேலே
அஜித்துக்கு
பண்ணனும்னு
நெனச்சேன்!

சிறப்பான இயக்குநர் ராம்
தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட உணர்ச்சி காவியங்களை இயக்கியவர் இயக்குநர் ராம். தங்க மீன்கள் படத்தில் தன்னுடைய மகளின் இயல்பான ஆசையை பூர்த்தி செய்யும் சாதாரண தந்தையாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. காட்சி அமைப்புகளிலும், திரைக்கதையிலும் இவரது அதிகப்படியான கவனம் இருக்கும்.

ராமின் அடுத்தப்படம்
தற்போது இவர் புரொடக்ஷன் நம்பர் 7 என்ற புதியப் படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தை அவர் தயாரித்துள்ளார்.

பிரேமம் நாயகன்
இந்தப் படத்தில் பிரேமம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துள்ள நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை அஞ்சலி. இவர் முன்னதாக ராம் இயக்கத்தில் பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூரியும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

தத்ரூபமான ரயில் செட்
யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக உமேஷ் ஜே குமார் பணியாற்றியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் இவர் தத்ரூபமாக போட்ட ரயில் செட் அனைவரின் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது.

மிஸ்கின் பாராட்டிய செட்
சமீபத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு திடீர் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கின் இந்த செட்டை பார்த்து உமேஷின் கலைநயத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றுவந்த சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு பெற்ற சூட்டிங்
இதையடுத்து படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில் சென்னையிலும் சிறப்பான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் டைட்டில் ரிலீஸ்
விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராம் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சினிமா ரசிகர்களை அதிர்வுக்கு உள்ளாக்கிவரும் நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.