Don't Miss!
- News உங்கள் ஆதார் கார்டு செயல் இழக்க செய்யப்படலாம்.. முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணிடுங்க!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்!
Recommended Video
சென்னை: நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது
மனம் திறந்த இயக்குநர்
ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அட்டை பாக்ஸ் போல்
இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்பதாவது, அதாவது ஒரு காட்சியில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பரை வைத்து நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்ட அமலா பால் உடல் முழுவதும் டிஷ்யூ பேப்பரை சுற்றிக் கொண்டு அட்டை பாக்ஸ் போல் வந்து நின்றாராம்.
எவ்வளவு முக்கியம்
இதனை பார்த்த இயக்குநர், டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது, ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
பார்க்கவே பாவமாக இருந்தது
இதைத்தொடர்ந்து அமலாபால் மிகக்குறைந்த டிஷ்யூ பேப்பர்களை வைத்து உடலை மறைத்தவாறு ஒருவித பயத்துடன் வந்துள்ளார். அப்போது அவரது முகம் முழுக்க பயமும் பதட்டமும் பரவியிருந்ததாம். அமலா பாலை பார்க்கவே பாவமாக இருந்ததாகவும் பரிதாபமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.