Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மரியாதை அதிகரிக்குது.. எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் அஞ்சலி.. ரத்னகுமார் நெகிழ்ச்சி #ThalapathyVijay
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் தளபதி ரசிகர்கள் #ThalapathyVijay ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
அரசு மரியாதையுடன் பாடும் நிலா பாலுவின் பூத உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது.
இளையராஜா சொன்னது போல தேவர்களுக்கு பாடவே எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்றுள்ளார் என ரசிகர்கள் கண்ணீர் விட்டு இரங்கல் தெரிவித்தனர்.
காற்றோடு கலந்த இசை
1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 74. 1966ம் ஆண்டு பின்னணி பாடகராக தனது இசைப் பயணத்தை தொடங்கிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வரைக்கும் பாடியுள்ளார். அவரது உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும், என்றுமே இசையாக நம்முடன் காற்றோடு காற்றாக கலந்திருப்பார்.
நேரில் அஞ்சலி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் காலை தொட்டு அவருக்கு இறுதி மரியாதை செய்த வீடியோக் காட்சிகள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தீயாய் பரவுகிறது
பிரபல நடிகர்கள் பலர் நேரில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்���ாத நிலையில், நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு, இசை அரசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதை தளபதி ரசிகர்கள் #ThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் புகைப்படங்களையும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
மரியாதை அதிகரிக்கிறது
#ThalapathyVijay என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், ஆடை பட இயக்குநரும் மாஸ்டர் படத்தின் இணை இயக்குநருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசின் அறிவிப்பு காரணமாகத்தான் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என நினைத்தேன். ஆனால், தளபதி விஜய் கலந்து கொண்ட பிறகு, அது தனிப்பட்ட விருப்பம் என்பது தெரிகிறது. அவர் மீது மரியாதை அதிகரிக்கிறது. இசை உலகின் முடி சூடா மன்னனுக்கு இப்படியொரு மரியாதை கொடுப்பது மிகவும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு நன்றி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் விஜய், எஸ்.பி.பியின் மகன் சரணிடம் ஆறுதல் கூறி விசாரித்த புகைப்படத்தை பதிவிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு Respect என கரங்களை கூப்பி நிற்கும் எமோஜிகளை போட்டு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவையும் பொருட்படுத்தாது எஸ்.பி.பிக்காக ஓடோடி வந்த விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.