Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய் தந்தை பட யூனிட்டுக்கு தமிழக அரசு 'ஃபைன்'!
சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படத்தில் சத்யராஜும், சீமானும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்றது.
இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். இருப்பினும் எப்படியோ அனுமதியை வாங்கி விட்டார் சந்திரசேகர். ஆனால் இதற்கு சுற்றுச்சூழலியாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்த பகுதியில் குப்பைகளாக்கி அசுத்தப்படுத்தி பாழ்படுத்தி விட்டதாக கூறி படப்பிடிப்புக் குழுவினருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், படப்பிடிப்பு நடந்த பகுதியை நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது படப்பிடிப்பு நடந்த இடங்களில் நிறைய குப்பைகளைப் போட்டு வைத்திருந்தனர். மேலும், அங்குள்ள குளத்திற்கு அருகில் உள்ள புதர்ப் பகுதிகளையும் பாழ்படுத்தியிருந்தனர். மேலும், சிலம்பாட்டக் காட்சிகளைப் படமாக்குவதற்காக அங்குள்ள இயற்கையான மூலிகைச்செடிகளை உடைத்து குச்சிகளை எடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதை அவர்கள் கட்டி விட்டனர் என்றார்.
இந்தப் படத்தை ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக சத்தியமங்கலம் வனப் பகுதிக்குட்பட்ட ஆசனூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.
இதற்கிடையே, வனத்துறை மீது சிறப்பு அதிரடிப்படையினர் வேறு புகாரைக் கூறுகின்றனர். சமீபத்தில் நாங்கள் வனப்பகுதியை பாழ்படுத்தி விட்டதாக கூறி காட்டை விட்டு வெளியேறுமாறு வனத்துறை கூறியது. ஆனால் சினிமாப் படப்பிடிப்புக்கு மட்டும் தாராளமாக அனுமதிக்கிறார்கள். இது எந்த ஊர் நியாயம் என்று அவர்கள் குமுறுகின்றனர்.