Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
எழுதி வச்சுக்கோங்க...2 வருடத்தில் விக்ராந்த் மிக முக்கியமான நடிகர் - பாலா பாராட்டு!
சமுத்திரக்கனி இயக்கிய தொண்டன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாலா, இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ராந்த் இன்னும் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராவார் என கூறினார்.
சென்னை: சமுத்திரக்கனி இயக்கிய தொண்டன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, படத்தில் நடித்த நடிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டர்.
இயக்குநர் சமுத்திரகனி, அப்பா திரைப்படத்துக்கு பிறகு சமூக அக்கறைகொண்ட இயக்குநர் என்கிற பெயரை சம்பாதித்துள்ளார். அவர் இயக்கிய தொண்டன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா உள்பட பலர் கலந்துகொண்டர்.
விழாவில் பேசிய பாலா இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனைப் பார்த்தால் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர் போல் இருக்கிறார். ஆனால் நன்றாக பாடல்களைக் கொடுத்துள்ளார். இந்தப் டத்தில் நடித்துள்ள விக்ராந்த் இன்னும் இரண்டு வருடங்களில் மிகச் சிறந்த நடிகனாக உருவெடுப்பார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என விக்ராந்தை மேடையில் அவர் அருகில் நிற்க வைத்து நம்பிக்கை வார்த்தை பேசியதில் விக்ராந்த் குளிர்ந்து போனார்.
கஞ்சா கருப்பு குறித்து பேசிய பாலா, தம்பி உன்னையை யார் படம் தயாரிக்கச் சொன்னது? இனியாவது புத்தியாகப் பிழைத்துக்கொள் என மேடையில் கூறியபோது, பாலா ஒரு அட்வைஸர் போல என நினைக்க வைத்தார்.
தொண்டன் இடையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, இந்தப் படத்தில் ஒரு பாடலை திரையில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கவிஞர் யுகபாரதி எழுதினார். அப்பாடல் மிக அருமையாக வந்துள்ளது என கூறினார்.