Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆள் அம்பு சேனை... அடுத்த 'யுத்தத்திற்கு' தயாராகி விட்டார் இயக்குநர் சரண்!
சென்னை : இயக்குநர் சரண் - வினய் கூட்டணி மீண்டும் ஆள் அம்பு சேனை படம் மூலம் இணைந்துள்ளது.
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சரண். இவர் தற்போது வினயை வைத்து ‘ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப் பட உள்ளது.
ஆள் அம்பு சேனை...
இந்நிலையில், தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கி விட்டார் இயக்குநர் சரண். தனது புதிய படத்திற்கு ‘ஆள் அம்பு சேனை' என அவர் பெயரிட்டுள்ளார்.
வினய்...
இப்படத்தை சரண் தனது சொந்த நிறுவனமான சரண் மூவி பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இப்படத்திலும் மீண்டும் வினயே நாயகனாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கியது...
ஆள் அம்பு சேனையின் நாயகி மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஆனால், படப்பிடிப்பு வேலைகளை சரண் ஆரம்பித்து விட்டார்.
ஆகஸ்ட் ரிலீஸ்...
இப்படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.