Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
களவாணி ரேஞ்சுக்கு இந்த சண்டி வீரன் இருப்பான்! - இயக்குநர் சற்குணம்
அதர்வா நடிப்பில் தான் இயக்கி வரும் சண்டி வீரன் படம், களவாணி மாதிரி விறுவிறுப்பாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும் என்றார் இயக்குநர் சற்குணம்.
அதர்வா ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருக்கிறார். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதர்வா, கயல் ஆனந்தி, இயக்குநர் சற்குணம், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இயக்குநர் பேசுகையில், ‘நான் இயக்கிய ‘வாகைச்சூடவா', ‘களவாணி' ஆகிய படங்களின் வரிசையில் ‘சண்டி வீரன்' படம் இருக்கும். ஆனால் அந்தப் படங்களின் சாயல் துளியும் இருக்காது.
அடுத்தடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்ட திரைக்கதை இது. அனைவரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு படமாக உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் கேரள நடிகர் லால் மில்லுக்காரர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முதலில் நான் பாலாவிடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டு நல்லா இருக்கு என்று சொன்னார். பின்னர் கதாநாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். நல்லது என்று கூறி இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார். கயல் படத்தை பார்த்து ஆனந்தியை தேர்வு செய்தேன்.
இது கிராமத்துக் கதை. எந்த வகையில் சாதிச் சாயம் இல்லாமல் உருவாக்கியிருக்கிறேன்," என்றார்.