Don't Miss!
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
“மனித நேயத்தை காட்டு என்றால் பார்த்தீபனை காட்டுவேன்“ ..சீனு ராமசாமி புகழாரம் !
சென்னை : இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பார்த்தீபனை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
சீனு ராமசாமி ட்விட்டரில் பார்த்தீபனின் சமீபத்திய நேர்காணலை பகிர்ந்து மனித நேயத்தை காட்டு என்றால் பார்த்தீபனை காட்டுவேன் என்று கூறியுள்ளார். மேலும் பார்த்தீபனின் உரையாடல்கள் எப்போதும் புதிது, முத்தம் போல மறைக்க முடியாதது என்று புகழ்ந்து இருக்கிறார் .
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ட்விட்டரில் அதிகம் ஆக்டிவ்வாக இருந்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி பல விஷயங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். இதன் வாயிலாக நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்தீபனின் நேர்காணல் ஒன்றை பார்த்து வியந்து போன சீனு ராமசாமி அந்த நேர்காணலை பகிர்ந்து பார்த்தீபனை புகழ்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் பார்த்தீபன் மனித நேயம் தான் உலகில் சிறந்தது என் முதல் படத்தில் இருந்து தான் எடுக்கும் அத்தனை படங்களிலும் மனித நேயம் பற்றி தான் பேசி வருகிறேன், பேசுவேன் என்று கூறியுள்ளார். மேலும் இங்கு ஆயுதங்கள் எதற்கு மனிதே நேயம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்றும் கூறியுள்ளார். பார்த்தீபனின் இந்த வார்த்தைகளை பாராட்டியே சீனு ராமசாமி ட்விட்டரில் பேசியுள்ளார் .
சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவை பார்த்த பார்த்தீபன் அதிகாலையில் அதிக மகிழ்ச்சி என்று கூறி நன்றி தெரிவித்திருக்கிறார். பார்த்தீபன் தற்போது கொரோனாவால் விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார் மேலும் தன் அடுத்த படத்திற்கான கதையையும் சரி செய்து வருகிறார்.
இதே போல் சீனு ராமசாமியும் கொரன்டைன் நேரத்தை வெறுமென கழிக்காமல் ஜெயா பிளஸ் தொலைகாட்சிகாக எடுக்க பட்ட ஒரு கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு வரிகள் எழுதி கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கு தன் வீட்டில் இருந்தபடியே வரிகள் எழுதி அது பாடலாக சிறப்பாக வர தன் வீட்டில் இருந்த படியே வீடியோ காண்பிரன்ஸ் மூலம் உதவியுள்ளார் . இதனாலே சீனுக்கு பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இயக்குனர் பார்த்தீபன் அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்ப கட்டபணியில் இருக்கிறார் பார்த்தீபன். மேலும் இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.